Description
பழங்குடியினர் வசிக்கும் கிராமம் சித்திலிங்கி. மலைகளும் வனங்களும் நிலங்களும் இருந்தாலும், மேல்படிப்புக்கு மாணவர்களும் வேலை வாய்ப்பைத் தேடி இளைஞர்களும் ஊரை விட்டுப் போக வேண்டியிருந்தது. 'துளிர்' அமைப்பு, இப்படி ஊரை விட்டுச் சென்ற இளையோர்களின் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவந்து உள்ளூரிலேயே அவர்கள் வாழ வழிசெய்கிறது. இலட்சியவாதிகள் இருவரின் சிறிய தூண்டுதல் ஒரு கிராமத்தின் முகத்தையே மாற்றிக் காட்டிய கதையைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.