Description
ஹெச்ஐவி நோயில் தாயை இழந்து, அந்த நோயால் தானும் பாதிப்புக்குள்ளாகி எல்லோராலும் விலக்கப்படும் கிருஷ்ணன் என்ற பதிமூன்று வயதுச் சிறுவனுக்குப் பள்ளிப்படிப்பு தடைபட்டுவிடுகிறது; வாழ்க்கையே அவ்வளவுதான் என்றிருந்தவனுக்கு சினேக இல்லம் ஒரு புதிய வாசலைத் திறக்கிறது; தனக்குள் இதுவரை அவனே அறியாமலிருந்த ஒரு திறமையைக் கண்டறிகிறான். அவனைப் போன்றே ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மேலும் பல நண்பர்கள் அவனுக்குக் கிடைக்கிறார்கள். அவனது வாழ்வில் புதிய ஒளி பிறந்த கதையைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.