Description
.இந்த மாதிரிக் கதைகளில், எழுதுகிறவனுக்கு உள்ளதைவிட, வாசிக்கிறவருக்கு மிக அதிகமான சுதந்திரம் இருக்கிறது. இரண்டாம் வாசிப்பில், உட்கதைகளை வாசகர் தம் இஷ்டப்படி வரிசை மாற்றிக்கூட வாசித்துக்கொள்ளலாம்... உன்னுடைய கதைகளில் நீ உருவாக்கும் உதிரிக்கதைகள் உத்தியின் சிறப்பம்சம் அது. மொத்தத் தொகுப்பை வாசிக்கும் ஒருவர், தமக்குப் பிடித்த கதைகளை ஒவ்வொரு கதையிலிருந்தும் உருவி, தமக்குப் பிடித்த மாதிரியான முழுக்கதை வேறொன்றை சிருஷ்டித்துக்கொள்ளலாம்...
- ‘காணாமல் போனவனின் கடிதங்கள்’ கதையிலிருந்து