Description
இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் பெண்கள் அத்தனை பேரும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அடிகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் வாழ்வில் சந்தித்தவர்கள்.
ஆனால் அவை எதுவும் இவர்களுடைய வெற்றியை பாதிக்கவில்லை. நிகரற்ற, மிகப்பெரிய வெற்றி!
பெண்களால் என்ன முடியும் என்று இன்றுவரை கேட்கும் சமூகம்தான் இது. பெண்களால் எல்லாமே முடியும் என்பதை வாழ்ந்து, சாதித்துக் காட்டியவர்களின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், வெற்றியின் உச்சப் படியில் ஏறிக் கொடி நாட்டுவதற்கான வழிமுறைகளையும் இந்நூல் கற்றுத் தருகிறது.