Author: தமிழ்மகன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 335.00

Description

நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி... வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவுப் பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை, 'வெட்டுப்புலி' ஆக்கினேன். ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான். இது 19 ஆம் நூற்றாணடின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டணத்தின் அந்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன. பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதனின் கதை இது. வரலாற்றுப் பிழையாய் வஞ்சிக்கப்பட்ட விவாயிகளின் கதை. நிலத்தின் கதை.

You may also like

Recently viewed