Description
மதுரைவீரன் அரசு அதிகாரத்தால் வன்கொலை செய்யப்பட்ட ஒரு பெருவீரன். அந்த அரசு அதிகாரம் நிலைதடுமாறிக் காலவெள்ளத்தில் கரைந்து போயிற்று. ஆனால் அடித்தள மக்களின் பண்பாடோ வெளிப்படுத்த முடியாத எதிர்ப்புணர்வோடு மதுரைவீரனைத் தெய்வமாக்கி நிலை நிறுத்தியது.... அரசியல், சமூக அதிகாரங்கள் கட்டுவிடும் பொழுதெல்லாம் நாட்டார் மக்கள் தங்கள் தெய்வங்களுக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரப் போராடி இருக்கின்றனர் என்பதே இவரது களஆய்வில் நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும்.
பேரா.தொ.பரமசிவன்