Description
சூன்யத்திற்கும், வாழ்வுக்குமான இந்த நெடிய யுத்தத்தில் பின்னம்தான் சுரணை. பின்னங்களின் கூட்டுத்தொகை அல்லது சுரணைகளின் ஈவு தான் இந்தத் தொகுப்பு. மகரக்கட்டு உடையத்துவங்கும் சமூகத்தின் குரல்வளையிலிருந்து ஒரு கலகக்குரல், சொல்லுக்கும் அறைகூவலுக்கும் இடையில் ஒரு சமிக்ஞை அல்லது குலவை. இலக்கியம் என்பது சுரணை.எத்தனை கோடை வந்து வறண்டாலும் சாகாத புல்லின் வேர். காற்றில் ஈரம் உறிஞ்சி வளரும் தாவரம்.தன் நெஞ்சறியப் பொய்க்காதவர்களின் மனசாட்சி.