Description
“குளத்தை பயன்படுத்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு உரிமை உண்டு என்பதை சாதி இந்துக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த சத்தியாகிரகத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிருஷ்ட வசமாக, இப்பகுதியிலுள்ள சாதி இந்துக்கள் தங்கள் போக்கில் முரட்டுப்பிடிவாதமாக உள்ளனர்; முகமதியர்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் உட்பட அனைத்து சாதியினருக்கும் பொதுவான இந்தக் குளத்தைப் பயன்படுத்துவதற்குத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குள்ள உரிமையை ஏற்க அவர்கள் மறுக்கின்றனர். இதில் விந்தையிலும் விந்தை என்னவென்றால் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுவோருக்கு சொந்தமான கால்நடைகள் இங்கு தண்ணீர் குடிப்பதற்கு அனுமதிக்கின்றனர், ஆனால் மற்றவர்களைப் போலவே நல்ல மனித ஜீவன்களான இவர்கள் குளத்துக்குப் போகாதபடி தடுக்கப்படுகின்றனர்.