Description
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஓர் அறவுரையன்று :ஓர் எச்சரிக்கையாகும். கழுகுமலை முருகன் கோயிலும் வள்ளியூர் முருகன் கோயிலும் சமணர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட கோயில்கள்.இந்து மதம் என்றொரு மதமோ கொள்கையோ இந்து மதத்திற்கென்று ஒரு தத்துவ நூலோ கிடையாது. வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்து விடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும்.
-பேராசிரியர்
தொ. பரமசிவன்