Description
கடல் கடந்து போனாலும் கால்தடம் கூடவே வரும்” என்றொரு சொலவடை தெற்கே உண்டு.கால்தடம் போகிறதோ இல்லையோ இந்தச் சாதி மட்டும் காலைச்சுற்றிய பாம்பாக இந்தியர்கள் ஐரோப்பா போனாலும் அமெரிக்கா போனாலும் ஆளுக்கு முந்திப் போய் உட்கார்ந்து கொள்கிறது.அதை எதிர்த்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் நடத்தி வரும் போராட்டக்கதைதான் இந்தநூல்.அமெரிக்கா போனாலும் இந்துத்துவம் தன் கோரப்பல்லை டிசைன் டிசைனாகக் காட்டிய நிகழ்வுகள் நூலில் விளக்கம் பெறுகின்றன.ஒருவகையில் இது கடல்கடக்கும் சாதி எதிர்ப்புப் போராட்ட வரலாறாக இருக்கிறது