Description
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்து புகழ்பெற்றவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள்.
அவர்களின் படைத்தளபதிகளே அவர்கள் அத்தனை புகழ் பெறக் காரணமானவர்கள்.
போர்க்களங்களில் மன்னர்களுக்கு முன்னால் நின்று போரிட்டவர்கள் மட்டுமல்ல, அம்மன்னர்கள் போரில் இறக்க வேண்டிய சூழல் வந்தால் அவர்களுக்கு முன்பாக தன் இன்னுயிரை ஈந்து காலத்தால் அழியாப் புகழ்பெற்றவர்கள் அவர்கள்.
அத்தகைய அற்புதமான தமிழர் வரலாற்றில் இடம் பெற்ற வீரம் செறிந்த போர்ப்படைத் தளபதிகளைப் பற்றிய அருமையான தகவல்களைத் தரும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் தந்திராத, மேலும் யாரும் தர இயலாத அருமையான வரலாற்று ஆவணமாகும்.