Description
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம் என்ற நாவலின் முதல் பகுதிக்கு, ‘இயற்கை மரணம்’ என்றும், இரண்டாம் பகுதிக்கு ‘உணர்வு மரணம்’ என்றும் தலைப்புகள் கொடுத்திருக்கிறார். இயற்கை மரணத்திற்கு ஜாக்ரெஸின் மரணத்தையும், உணர்வு மரணத்திற்கு பத்ரீஸ் மெர்சோவின் மரணத்தையும் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்.