Description
“இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா?” என்ற கேள்வியை எழுப்பி, “ஆம். இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவதும் இருக்கும்” என்று விடையளிப்பதுடன் தொடங்குகிறது ஜெர்மானியப் புரட்சிகரக் கவிஞர் பெர்டோல்ட் ஃப்ரெஹ்ட்டின் கவிதையொன்று. அந்தக் கவிதைக்கேற்ற வகையில்தான் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கலை, இலக்கிய, அரசியல், வரலாற்றுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஃபெய்ஸ் ஃபெய்ஸ் அஹ்மத் கூறியதுபோல, பேசு, ஏனெனில் உன் உதடுகள் சுதந்திரமாக உள்ளன; பேசு, உனது நாக்கு இன்னும் உன்னுடையதாகவே இருக்கிறது உனது நிமிர்ந்த உடல் உன்னுடையதுதான் பேசு, உன் உயிர் இன்னும் உன்னுடையதுதான்.