Description
கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் இரண்டு தசாப்தங்களாக இணையத்தில் எழுதியுள்ள முந்நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளுள் தேர்ந்தெடுத்த படைப்புகளின் தொகுப்பு. காலம் கடந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் பாராட்டப்பட்ட படைப்பாளியான இவரது கவிதைகள் தற்பொழுது புத்தகமாக உலக அளவில் தமிழின் பெருமைகளை எடுத்துரைத்து வரும் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களால் பெருவிருப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளால் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு, தற்பொழுது அவர்களால் கொண்டாடப்படும் இந்தப் புதுமைத் தமிழை அனுபவிக்கத் தவறாதீர்கள்!