Description
செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய மனிதர்கள் பூமியில் மனித இனத்திற்கு எதிரான போரை நிகழ்த்தி இங்குள்ள மனிதர்களையும் பிற எல்லாற்றையும் அழித்துவிடுவதான சுவையான புனைவுக் கதையே இந்நாவல்.
கண்ணுக்குத் தெரியாத செவ்வாய் கிரகத்து மனிதர்கள் பூமிக்கு வருவதாகவும் அவர்களால் ஏவப்பட்ட ராட்சச சிலந்தி போன்ற உலோக எந்திரங்கள் இங்கிலாந்து நகரங்களின் மீதான தாக்குதல் தொடுப்பதாகவுமான சிலிர்ப்பும் திகிலுமான கதை இது. நகரக் கட்டிடங்களின் மீது நடத்தப்படும் மிரட்சிகரமான மோதல்களில் மனிதர்கள் அல்லலுறுவதும் மரணிப்பதுமாக அலைவுறும் நாவலின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு இனம் புரியாத உணர்நிலையைத் தருபவை.