Description
செப்டம்பர் 11, 1973 - சீலே நாட்டின் குடியரசுத் தலைவர் சால்வதோர் அய்யந்தேவை வட அமெரிக்க சி.ஐ.ஏ கட்டளைக்கிணங்க சீலே ராணுவம் படுகொலை செய்த நாள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அய்யந்தே படுகொலையோ, 638 முறை நடந்த காஸ்த்ரோ கொலை முயற்சிகளோ, பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த சாவேஸ் படுகொலையோ -இன்று லத்தீன் அமெரிக்காவில் இறையாண்மை மிக்க அரசுகள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிடவில்லை! பத்து நாடுகளில் இடதுசாரிகள் புதிய இளஞ்சிவப்பு அலையை எழுப்பி இருக்கிறார்கள்! உலகெங்கும் அழித்தொழிப்பு வேலை செய்யும் வட அமெரிக்காவிற்கு, உயர் கல்வியும் மருத்துவமும் சமூகப் பாதுகாப்பும் கிட்டாத அதன் ஏழை மக்களே பாடம் புகட்டுவார்கள்.