Description
அதிகாலை வேளையில் மிகுந்த ஆற்றலோடு ஆன்மீக உணர்வலைகள் பரவிக் கிடக்கின்றன. தெய்வீக மவுனமும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பேரமைதியும் நிலவுகிறது. உறங்கிக் களிக்க ஏங்கும் மனதை உறுதியோடும் வலிமையோடும் கைவிட்டுக் காலை இளங்கதிரை வரவேற்க மலையின் மீது ஏறுபவன், அவ்வாறு வளர்த்துக்கொண்ட உள்ள உறுதியினாலும், வலிமையினாலும் உண்மை, பேர் அருள் என்ற மலைகளின் பல உயர்ந்த சிகரங்களையும் தொடுவான்.