Description
குமரி மாவட்ட மக்களின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றைப் பேசும் இந்த நூல் வெறும் ‘வறட்டு’ வரலாற்று நூல் அல்ல. இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களிலிருந்து எய்திய உணர்வெழுச்சியால் உருவாக்கப்பட்ட படைப்பு. ஒடுக்கப்பட்ட இனத்தின் பெண்கள் மேலாடை அணிவதற்கும் உரிமையற்று வாழ்ந்த காலமும் தோள்சீலை போராட்டத்தால் உயர்சாதியரின் கொட்டம் அடங்கிய கதையும் நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. நேசமணியும் காமராஜரும் வைகுண்டரும் இன்று காணக் கிடைக்காத மாமனிதர்கள். குமரியின் கதையில் எத்தனை மனிதர்கள், எத்தனை போராட்டங்கள், எத்தனை கதைகள். கன்யூட்ராஜை குமரி கடலைகள் என்றென்றும் ஆர்ப்பரித்துப் போற்றும்.