Description
பல சிற்றிதழ்களிலும், அவற்றின் ஆண்டு மலர்களிலும், பல்வேறு நூல்களில் முன்னுரையாகவும் தோழர் அமரந்த்தா அவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய அரிய தொகுப்பு இது. வரலாற்று நீரோட்டப் போக்கிலேயே செல்லாமல் அமரந்த்தா அதனை எதிர் நின்று பார்ப்பதால், பலருக்கும் புலப்படாத ஏகாதிபத்திய செயல்பாடுகளை - கார்ப்பரேட் உலகின் புதிய திருவிளையாடல்களை - மக்கள் முன் அவர் வைத்துள்ளார். அமரந்த்தா தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியாக இருந்து தனது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது, மக்களின் மேல் அவருக்குள்ள அன்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும்.