Description
விவசாயிகளின் கண்ணீரை, சிறையுலக அனுபவங்களை, அகதி முகாம்களில் அடைபட்டிருக்கின்ற தமிழர்களின் கொடுமைகளை, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் வலிகளை, கூலித் தொழிலாளர்களின் துயரங்களை, தூக்கிலிடுபவரின் மனப்பிறழ்வுகளை, நிலம் மறுக்கப்பட்ட புலைய, ஈழவ மக்களின் வாழ்க்கையை இப்படி அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களை எழுத்தில் வடிப்பவையாக இருக்கின்றன செங்கொடியின் கட்டுரைகள். ஒரு கண்ணில் வியப்பையும், மறுகண்ணில் கண்ணீரையும் தேக்கி வைக்காமல் இந்த நூலைக் கடந்து போக முடியாது.