Description
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறையையும், 1925இல் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவிலேயே கொன்றுவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடுத்த சதி வழக்குகளையும் அவற்றின் விவரங்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவர்கள் செய்த தியாகத்தையும், துணிச்சலையும், அர்ப்பணிப்பு வாழ்க்கையையும் இந்நூல் வழிக்கண்டு நாம் மலைத்துப் போகிறோம். நமது பரம்பரை, நெருப்பாற்றிலே எதிர்நீச்சல் போட்ட புகழ்மிக்க பரம்பரை என்பதை இன்றைய தலைமுறைக்கு இந்த நூல் நினைவுபடுத்துகிறது. இன்றைய இளந்தலைமுறைக்கு உத்வேகமும், எழுச்சியும் ஊட்ட இந்தப் புத்தகம் நிச்சயமாக உதவி செய்யும்.
- தா.பாண்டியன்