ஆகாத தீதாரில் 13 சிறுகதைகள் இருக்கின்றன. அவையனைத்தும் மரணத்தை ஒட்டி எழுதப்பட்ட கதைகள். மரணத்தின் வாசம் இந்த 13 கதைகளிலும் உலாவிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் மரணத்தைத் தாண்டி, இந்த 13 சிறுகதைகளுக்குள்ளும் பேசப்படாத வாழ்க்கையை தமிழ் சமூகத்திற்கு ஆமினா முஹம்மது அறிமுகம் செய்திருக்கிறார்.