Description
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.
மனித வளர்ச்சி பற்றி கூறுகிறது. யதார்த்த வாழ்வின் சம்பவங்களை விளக்குகிறது. சமுதாயம், இல்லற வாழ்வு போன்ற தலைப்புகளில் விவரிக்கிறது. தந்தை முதல் மாத சம்பளத்திலிருந்து வாங்கிய சைக்கிள் நினைவுகளை அழகாக கூறுகிறது. அதற்கு, ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் குளியல் நடக்கும் என்பதை நயமாக குறிப்பிடுகிறது.
பொருட்களை கையாளும் வழிமுறையை விவரிக்கிறது. உணவு அருந்துதல், வளைகாப்பு போன்றவற்றை நிகழ்ச்சியாக கூறியுள்ளது. சங்க இலக்கியத்தில் வெள்ளிவீதியார் பாடலின் கருத்து விளக்கப்பட்டுள்ளது. கவிதை விரும்பிகள் ரசனைக்கு உகந்த நுால்.
– புலவர் ரா.நாராயணன்