Author: பி. எஸ். வி. குமாரசாமி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 399.00

Description

அனைத்து விஷயங்களுமே கச்சிதமற்றவை, முடிவுறாதவை மற்றும் நிலையற்றவை என்பதை எடுத்துரைக்கின்ற ஒரு ஜப்பானிய ஜென் தத்துவம்தான், ’வாபி சாபி’. நம்முடைய வாழ்க்கை குழப்பமயமானதாக இருப்பது போன்ற உணர்வு நம்முள் எழும்போது, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும் அதன் ஊடாக இயங்குவதற்குமான ஒரு புதிய வழி இது. கச்சிதமின்மையையும் நிலையாமையையும் சுவீகரித்துக் கொள்வது நீங்கள் ஒரு மேம்பட்ட மனிதராக உருவெடுப்பதற்கு எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை இந்நூல் காட்டுகிறது. அதோடு, வாழ்க்கையில் எது உண்மையிலேயே முக்கியமானது, எதை நீங்கள் மெய்யாகவே விரும்புகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யவும் இது உங்களைத் தூண்டும். நீங்களும் உங்களுடைய கச்சிதமற்ற வாழ்க்கையும் நீங்கள் நினைத்திருப்பதை விட மிகச் சிறப்பாகவே இருப்பதையும், விஷயங்களை ஏற்றுக் கொள்வதும் விட்டுத்தள்ளுவதும் உங்களுடைய மிகச் சிறந்த, மிக மகிழ்ச்சியான சுயத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ள இந்நூல் உங்களுக்கு உதவும்.

You may also like

Recently viewed