Description
பதிப்பாளர் உரையில் இருந்து…
ஆறுமுக நாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வள்ளல் இராமலிங்க அடிகள், சூளை சோமசுந்தர நாயகர் ஆகியோரின் சமகாலத்தவரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இவர்களை விட வேறுபட்டு சிந்தித்து சமூகத் தொண்டாற்றினார். இவர் ஆங்கிலக் கல்வி பெறவில்லை. இவருக்கு ஆங்கில நாகரிகப்படி அமைந்த கல்வி நிறுவனங்களோடு தொடர்பில்லை. அரசு அதிகாரிகளோடு பழக்கமில்லை. ஆயினும் தனது முற்போக்கு கருத்துகளை மேற்கண்ட நான்கு பேரை விட ஆணித்தரமாக முன்வைத்தார்.
வறுமையாலும் பஞ்சத்தாலும் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் அறத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததைக் கண்ட சுவாமிகள், ஜீவகாருண்யத்தையும் வாழ்வியல் அறத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
* முதன் முதலாக 3034 பாடல்களுக்கும் விரிவான உரையுடன்…
* முதன் முதலாக ஆய்வு முன்னுரையுடன்
* 996 பக்கங்கள் – கெட்டி அட்டையுடன்…
* வழுவழு தாளில் சுவாமிகளின் வண்ணப் படத்துடன்…
* பாடல் முதற்குறிப்பு அகராதி மற்றும் மேற்கோள் பாடல்களுடன்…
* 29 ஆண்டுகளுக்குப்பின் வெளிவரும் பதிப்பு