Description
சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம் இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது சுவாரசியமாகும் மரபு என்று நீங்கள் நினைத்தது முட்டாள்தனமாய்த் தென்படும். உங்கள் வாழ்வின் அர்த்தம் தெள்ளத் தெளிவாய்த் தெரிய ஆரம்பிக்கும். விட்டு விடுதலையாகி வியனுலகம் காண்பீர்!