Description
சிந்திக்கும் ஆற்றல் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உண்டு என உதாரணங்களுடன் விளக்கும் நுால்.
மனம், மூளை ஆற்றும் செயல் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதுவே, ஆசிரியரின் கூற்றாகவும் உள்ளதால் சிந்திக்க வைக்கிறது. மெய்ஞானமும், விஞ்ஞானமும் மனிதர்களை ஆட்டிப் படைத்து இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இது வியப்பு தருகிறது.
அருணகிரிநாதர், திருநாவுக்கரசர் ஒப்பீடு ஆச்சரியமான உண்மை. ஆன்மிகவாதிகளும், விஞ்ஞானிகளும் படிக்க வேண்டிய நுால்.
– சீத்தலைச் சாத்தன்