Description
இன்று உலகமெங்கும் பரவியிருக்கிற தமிழர்கள் நாவல்கள் எழுதுகிற போக்கு, தமிழ் மொழியை உயிரோட்டமானதாக்கியுள்ளது. யோசிக்கும்வேளையில் இது ஒரு நாவல்களின் காலம் உலகம் முழுக்க நாவல்கள் கொண்டாடப்படுகின்றன. மின்னணு ஊடகம் வலுவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் தமிழில் வெளியாகின்ற நாவல்கள். வாசிப்பில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
நாவல்கள்மூலம் தங்களுடைய கொடியைப் பறக்கவிட்ட நாவலாசிரியர்களின் படைப்பூக்கம் பற்றிய பேச்சுகள்தான் நாவல்களின் உலகம் புத்தகமாகியுள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 36 நாவல்கள் பற்றிய அறிமுகமும் விமர்சனமும் இலக்கிய ஆர்வலர்களின் தேடுதலைத் துரிதப்படுத்தும்.