Description
கன்சிராம் அவர்கள் விரும்பியதை, அவர் மண்ணிலே செய்ய முடியாததை திராவிட இயக்கம் செய்து காட்டியுள்ளது. இந்நாட்டில் பார்ப்பனரை தவிர்க்க முடியாத அரசியல் களம் என்கிற நோக்கம் தவிடுபொடியாகி மக்கிப்போயுள்ளது பெரியார் மண்ணில். அண்ணா, கலைஞர் தொடங்கி இன்று தமிழ்நாடு அசுர வளர்ச்சி பெற்று பெரியார் அம்பேத்கர் வழியில் சமூகநீதி, ஒடுக்கபட்ட மக்களின் கல்வி, உயர்கல்வி, மொழி உரிமை, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பெண் சுதந்திரம், பொருளாதார முன்னேற்றம் என்று அத்துணை துறைகளிலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது திராவிட மாடல். திராவிட மாடல் ஆட்சியை அய்யா கன்சிராம் அவர்கள் காண வாய்ப்பிருந்திருந்தால் "திராவிட தளபதி ஸ்டாலின்” அவர்களை அள்ளி அணைத்து என் எண்ணமெல்லாம் நிஜமாகி போனது என்று முத்தமிட்டுருப்பார்.