Description
"ஆனால், அனுராதா வித்தியாசமானவராக இருந்தார். "
இதைத்தான் அனுராதா கந்தியை அறிந்திருந்த அனைவரும் சொல்கிறார்கள். யார் யாருடைய வாழ்க்கையை அவர் தொட்டாரோ, ஏறக்குறைய அவர்கள் அனைவரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். தோழர் அனுராதா கந்தி ஒருபுறம் புரட்சிகர இயக்கத்தின் போர்க் குணம் கொண்ட போராளியாகவும், மறுபுறம் ஆழ்ந்த தத்துவார்த்த புரிதல் கொண்ட தலைவராகவும் விளங்கினார். பெண்ணிய இயக்கத்தின் தத்துவார்த்த போக்குகள் குறித்த அவரது இந்தப் படைப்பில், அவரது தத்துவார்த்த தெளிவையும், சமூக நிலைமைகள் பற்றிய துல்லியமான புரிதலையும் நாம் ஒருங்கே காண முடியும்.
அருந்ததிராய்