Description
2004-ல் வெளியான ஷாராஜின் வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, அதன் மெல்லியல் கதைகளுக்காக சக இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் சிலரின் விருப்பங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அக் கதைகளை இன்னமும் நினைவுகூர்ந்து சிலாகிக்கும் சிலர் அதன் மறுபதிப்பைக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவிப்பார்கள். அதற்கிணங்க, அத் தொகுப்பில் உள்ள பத்து கதைகளோடு, இடைக் காலத்திலும் கடந்த ஓரிரு வருடங்களிலும் எழுதிய, இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத சில புதிய கதைகளும், ஐந்து நையாண்டிக் கதைகளும் சேர்த்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.