Description
தான் பிறந்து வளர்ந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு, 1977ல் தலைமன்னாரிலிருந்து புறப்பட்ட தருணத்தை, மன நெகிழ்ச்சியுடன் அதே இடத்தில் நின்று நினைவு கூறும் காட்சி, மிகவும் உருக்கமான, படிப்பவர்களைக் கண்கலங்க வைக்கும். உபாலி என்ற பெயர் கொண்ட வாகன சாரதி, 1983 கலவரத்தின் போது, அகதியாக இந்தியா வருவதும், அவர் ஒரு சிங்களவர் என்பதும், தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்ததும், தற்போது அவர்கள் வவுனியாவில் வாழ்வதையும் சுவைபட பதிவிட்டுள்ளார்.