Description
இதயம் நெகிழ்வது என்றால் என்ன? விலங்கினங்களுக்கு இந்த நெகிழ்ச்சியெல்லாம் ஏற்படுமா? மனிதர்களின் இதயத்தின் அமைப்பும், விலங்கினங்களின் இதய அமைப்பும் ஒரே மாதிரியானதுதானா? நமக்கு இந்த மாதிரி எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா? இவற்றைவிடவும் கூடுதலாக இன்னும் பல கேள்விகளை பேரா. சோ.மோகனா இந்தப் புத்தகத்தில் எழுப்பிக் கொண்டே போகிறார்.
எறும்பு என்பது எவ்வளவு குட்டியூண்டு உயிர்? அதற்கு பதிமூன்று இதயங்கள் இருக்கிறதென்றால், அப்புறம் திமிங்கிலம், யானை, டைனோசர் போன்ற மாபெரும் விலங்குகளுக்கு எத்தனை இதயங்கள் இருக்க வேண்டும்? அப்படி அவற்றுக்கு நிறைய இதயங்கள் உண்டா? இதயம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினாள் என்றெல்லாம் கதைகளில் படிக்கிறோமே,