Description
மலாயா (மலேசியா) மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடியவர்களில் முதன்மையானவர் மலாயா கணபதி. அடிமைப்பட்டவர்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் எண்ணியிருந்த நிலையில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை உரிமைக்காக போராட வைத்ததோடு மட்டுமின்றி தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சுதந்திர உணர்வையும் விதைத்த புரட்சியாளன் இவர். 75ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்நூலின் வாயிலாக மலாயா கணபதி உயிர்பெறுகிறார், அடுத்தத் தலைமுறைகளுக்காக. இவர் தமிழினத்தின் அடையாளம் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க்த்தின் முகவரி.