இரண்டு கிராம் யானை


Author: ஜே. மஞ்சுளாதேவி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 180.00

Description

‘ஆதித் தாயை இன்றும் காட்டும் யானைக் கூட்டம் அப்பத்தாக்களின் பின்னால் வரிசையிடும்' யானைகள் இயற்கையின் அதிசயங்கள் மட்டுமல்ல. நேசத்துக்குரிய பண்புகள் நிறைந்திருக்கும் களஞ்சியங்கள். மனிதன் மெச்சத் தகுந்த அறிவுடையவனாயினும் அழிவின் விதைகளை இன்னமும் சுமந்து நிற்கிறான். யானை என்ற வன நாயகன் மூலமாக மனிதனுக்குச் சில உண்மைகளைக் கவிஞர் கனிவோடும் கண்டிப்போடும் சொல்ல விழைகிறார். அந்த விழைவின் விளைச்சலே ‘இரண்டு கிராம் யானை’. புத்தகத்தின் பெயர்தான் ‘இரண்டு கிராம் யானை'யே தவிர கருத்தாலும், வளத்தாலும் கற்பனையாலும் ஆயிரம் பொன் யானை இது என வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். - சிற்பி பாலசுப்பிரமணியம்

You may also like

Recently viewed