Description
இந்நாவலுடைய நாயகனின் பெயர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய நினைவாக சூட்டப்பட்ட பெயர். அது தவிர அவனுக்கும் தலைவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நம் நாயகனோ தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு சாமானியன். ஒரு சமயம் அவன் இலங்கையை நோக்கிப் பயணிக்கிறான். அப்பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சுவாரஸ்யங்களையும், அதனூடே இலங்கையின் சமகால வாழ்வியலையும் பேசும் இந்த நாவல், போகிறபோக்கில் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அதன் தலைவரைப் பற்றியும் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களை தொட்டுச் செல்கிறது.