காரைக்கால் வரலாறு


Author: ஆ. துளசேந்திரன்

Pages: 138

Year: 2024

Price:
Sale priceRs. 150.00

Description

வரலாறு எழுதுவதில் சிறு வரலாறுகள் அதிக அழுத்தம் பெறுவது சமீபகாலமாக பெருகி வருகிறது. ஒரு சில பகுதிகளில் காணப்படும் வரலாறுகளின் சிறப்பின் காரணமாக சிறு வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சிறு வரலாறுகள் பெரு வரலாறுகளை சிறப்படை செய்கின்றன. பழங்கால ஆய்வுகள் குறித்த அரசக் குடும்பங்களின் வாரிசு வரலாறுகளில் வருகிறது. கி.பி. முதல் நூற்றாண்டியேலே ரோம் வணிகர்கள் தமிழகத்தில் பரவலான கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள அரிக்கமேடு, கடலூருக்கு அருகே இருக்கும் காரைக்காடு. மகாபலிபுரம் அருகே பாலாற்று முகத்துவாரத்தில் இருக்கும் வசவசமுத்திரம். காவேரிபூம்பட்டினம் அருகே வெள்ளையன் குடியிருப்பு போன்ற இடங்களில் வர்த்தகம் பெருமளவில் நடந்து இருக்கின்றன என்பதை அகழாய்வுகள் வழி தெரிவிக்கின்றன. வெள்ளாளூர். கருக்காகுறிச்சி, அழகன்குளம். திருக்கோவிலூர் போன்ற உள்நாட்டு இடங்களில் ரோமானியர்கள் வணிகம் நடைபெற்றது. காவேரிபூம்பட்டிணத்தில் சோழ மன்னர்களின் வர்த்தகப் பொருள்கள் சேமிகப்பட்டு இருந்தன. சங்க இலக்கியத்தில் இந்திய வணிகருக்கு தென்கிழக்கு நாடுகளில் இருந்த வணிகத் தொடர்புகளை குறிப்பிடுகின்றன. 6-ஆம் நூற்றாணாடில் நாகப்பட்டினத்திலிருந்து கேடாவிற்கு 40 நாட்களில் தென்னிந்திய கடல் வணிகர்கள் சென்றனர் என்று மிலிண்டா பன்ஷா, கிட்சிங் பயணக்குறிப்புகள் மூலம் தெரிகின்றன.

You may also like

Recently viewed