Description
முன்பு
எனக்குத் தோன்றும்போதெல்லாம்
அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பது
வழக்கமாயிருந்தது
அது பாய்ந்துகொண்டிருந்தது.
தன்வழியில்
ஒருமுறை
வான்சூடிய பிறையைப் பேசியவாறு
தோல் மிதவையில்
அது
என்னை அழைத்துச்சென்றதும்
பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும்
ஞாபகமிருக்கிறது
அதன்பிறகு
எங்கள் சந்திப்பு வாய்த்திருக்கவில்லை
இங்கு
அதன் கரையின்மேல் அமர்ந்திருக்கிறேன்
ஒருக்கால்
மலைத்தொடரொன்றில்
இப்போது
ஒரு சுனையாக அது இருக்கும்