Description
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீகாயத்ரி அவர்களின் முதல் கதைத் தொகுப்பு. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்தில் இருந்து எழுதப்பட்டவை. விலங்குகளாலும் பறவைகளாலும் நிறைந்துள்ள இவரது கதையுலகில் அன்பும் பரிவும் முகிழ்ந்திருக்கின்றன. ஓர் எறும்பிடம் உரையாடும் உள்ளம் தான் இக்கதைகள். இந்நூல் அச்சு சாத்தியமாக காரணமாக உடனிருந்த எழுத்தாளர் ராணி திலக் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஓர் இளம் படைப்புமனதின் கனவுலகை உங்கள் முன் வைக்கிறோம்.