Description
• பாஞ்சாலி துரியோதனனைப் பார்த்துப் பரிகசித்தது உண்மைதானா?
• பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தது சாத்தியமா? பாஞ்சாலி பத்தினியா?
• லட்சக்கணக்கான போர்வீரர்கள் போருக்குத் தயாராக இருந்த போர்க்களத்தில் கீதோபதேசம் எப்படிச் செய்யப்பட்டது? இது சாத்தியமா?
• கர்ணன் உண்மையிலேயே கொடை வள்ளல்தானா?
• ஶ்ரீ கிருஷ்ணருக்கு கர்ணன் தானம் கொடுத்தது உண்மையா?
• கௌரவர்கள் திராவிடர்களா?
• கெளரவர்கள் வீழ்த்தப்பட்டது நியாயமான முறையில்தானா?
மகாபாரதம் மீது தொடுக்கப்படும் இவை போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, வியாச பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, எளிய தமிழில், ஆழமாகவும் விரிவாகவும் பதில் அளித்திருக்கிறார் மு.ஜெயபோஸ்.