Description
சமூகக் கட்டமைப்பின் அழுத்தங்களினால் தனிப் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கடினமான பாதையைக் கடக்க வேண்டியுள்ளதைச் சட்டரீதியாக, மனோதத்துவரீதியாக, பள்ளி ஆசிரியர்களின் பார்வையினூடாக ஆழ்ந்து நோக்கியுள்ளது இந்தத் தொகுப்பு. விவாகரத்தானதாலோ, இணையர் இறந்ததினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தனியாகக் குழந்தையை வளர்ப்பதில் ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு வேறு மாதிரியும் சிக்கல்கள் உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
- திரைக் கலைஞர் ரோகிணி