Description
அறிவையும் உணர்வையும் நேர்க்கோட்டில் சந்திக்க வைப்பதே இப்பிரதியின் மையச்சரடு. அதன்பொருட்டு நிகழும் மனநிலை, வெளிப்பாடு, எதிர்வினை,சமூகப் பிரதிபலிப்பை வெவ்வேறு விதமாய் 16 கதைகளாக எழுதிச் செல்கிறார் எழுத்தாளர். காமத்தின் பித்தையும் காதலின் அதீதத்தையும் அகராதியால் நாசூக்காய் ஆத்மார்த்தமாய் அடர்த்தியாய் எழுதமுடிவது பாராட்டுக்குரியது. அறிவையும் உணர்வையும் சந்திக்க வைக்கும் அனாகதத்தின் பெயர் இந்நூலுக்குப் பொருத்தமாய் அமைகிறது.
நவீன கதைவெளியில் அகராதியின் அனாகதம் அக்னியாய் ஒளிரும். வாழ்த்துக்கள் அகராதி.
- அமிர்தம் சூர்யா