Description
தாயைத்தின்னி’யை வாசிப்பதற்கு முன்னால் இலக்கியத்தில் ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற வித்தியாசம் எதுவும் இல்லை என்றே நினைத்திருந்தேன். Kathy Acker, Elfriede Jelinek, Cristina Perri Rossi, ஸில்வியா ப்ளாத் போன்றவர்களைப் படித்த பிறகும்கூட என்னுடைய இந்தக் கருத்தில் மாற்றம் ஏற்படவில்லை. கூடு விட்டுக் கூடு பாயும் முறையில் பெண்களின் வதைகளை ஆண்களால் எழுதிவிட முடியும், அதனால் இலக்கியத்தில் பால் பேதம் தேவையில்லை என்பதே என் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் தில்லையின் தாயைத்தின்னி அந்த என் நம்பிக்கையைத் தகர்த்து விட்டது.
- சாரு நிவேதிதா