Description
ஓர் ஆசிரியராகத் தான் சந்தித்த போராட்டங்கள், தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை இப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் நூலாக எழுத வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அந்த வரிசையில் ஆசிரியை என்கிற பெருமையோடு ஒரு பெண் ஆசிரியராக கமலா அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை மட்டுமல்ல, அவருடைய சிறந்த தருணங்களையும் இந்த நூல் சிறப்பாக முன்வைக்கிறது.