Description
“நாடகத் துறையில் சிறிது காலம் மட்டுமே நான் பயணப்பட்டாலும் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொண்டதோடு, நிறையக் கற்றுக் கொடுத்தும் வருகின்றேன். உடலளவிலும், மனதளவிலும் எனக்குள் மாற்றங்களைக் காண முடிகின்றது. உதாரணமாக, மூளை சொல்வதால் உடலில் வலி தெரிகின்றது. அந்த வலிகள் எனக்கு அரங்கத்தில் இருக்கும்போது தெரிவதில்லை; வலிகளை மறக்கவும் குறைக்கவும் செய்யும் அருமருந்தாக அரங்கத்தைப் பார்க்கிறேன்.”