Description
‘வண்ணத்துப்பூச்சியும் புலிக்குட்டியும்’ என்பது சிறுவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னக் கதைகள் ஆகும். சிறுவர் இலக்கியத்தில் விலங்குகள், பூச்சிகள், பறவைகளை வைத்துக் கதைகள் சொல்வது ஒரு மரபு. அந்த மரபு உதயசங்கரின் எழுத்துகளில் அழகும் புதுமையும் பெறுகிறது. இத்தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் புதிது புதிதான கற்பனைகளோடு எளிய மொழியில் உள்ளன என்பது சிறப்பு. சிறுவர்களின் மனஉலகோடு நெருக்கமான கதைகள் இவை என்று சொல்லலாம்.