Description
'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிது'
என்றார் பாரதியார். இந்தியத் திருநாட்டில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த, சாதனை மகளிரைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். தரையிலும், நீரிலும் , வான்வெளியிலும், அரசியலிலும், விளையாட்டிலும், அழகியலிலும், நிர்வாகத்திலும் சவால்கள் நிரம்பிய பணிகளை மிக எளிதாகக் கையாண்டு அவற்றில் தனித்துவம் மிக்க சாதனைகளையும் படைத்த பெண்களையும், அவர்களின் முயற்ச்சிகளையும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குமுதம் சிநேகிதி இதழில் கில்லாடி லேடி என்ற தலைப்பில் தொடராக நான் எழுதி வரும் கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி இது.