Description
”ஷேக்ஸ்பியர்” ஆங்கில இலக்கியத்தின் முடிசூடாச் சக்கரவர்த்தி. கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பன்முகத்தன்மை உடையவர். ஆங்கிலேய தேசிய கவி எனப் போற்றப்படுபவர். அவர் எழுதிய நாடகங்கள் ஆங்கில இலக்கிய நூல்களின் தலைமையாகப் போற்றப்படுவன. அவற்றை சிறுவர்களும் படித்துப் பயனுற வேண்டும் எனும் நோக்கில் கதை வடிவில் ”சார்லஸ் லாம்” என்ற ஆங்கிலப்புலவர் எழுதியுள்ளார். இவை தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலில் தமிழறிஞர் திரு. கே. அப்பாதுரை அவர்கள் எளிய இனிய தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்கள்.காலத்தால் அழியாத ஆற்றல் மிக்க ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழ் மக்களும் படித்து இன்புற கதை வடிவில் மூன்று பாகங்களாக உங்கள் கரங்களில் ...