Description
பொதுவாக நாம் அறிந்திருக்கும் இராமாயணம் இராம பட்டாபிஷேகத்தோடு நிறைவு பெற்று விடும். ஆயின் இராமாயணம் அங்கே நிறைவெய்துவதில்லை. மனிதனாக அவதரித்த ஸ்ரீராமர் தமது மானிடக் கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டு வைகுந்தம் ஏகும் தருணத் தில்தான் நிறைவடைகிறது. இந்தப் பகுதி உத்தர காண்டம் என்றும் உத்தர ராமாயணம் என்றும் புகலப்படுகிறது.
உத்தரகாண்டத்தில், இராமராஜ்யம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது சொல்லப்பட்டிருக்கிறது. ஓர் அரசன், தர்மநெறி தவறாமல் ஆட்சி புரிவது எப்படி? தனது ஆட்சிக்குட்பட்ட அத்தனை உயிரினங்களுக்கும், (ஆம், மனிதர்கள் மட்டுமல்ல) தீங்கு நேராமல் பார்த்துக் கொள்வதெப்படி என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குதல், பருந்து – ஆந்தை வழக்கைத் தீர்த்து வைத்தல் என இதுவரை கேள்விப்படாத பல விசித்திர, வினோத தர்மநெறிக் கதைகள் இந்தக் காண்டம் முழுதும் விரிந்துள்ளன. உற்றார், பெற்றாரிடமும், ஏன் குற்றவாளிகளிடமும் கூட எப்படி அன்பு செலுத்தவேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உள்ளன. எப்போது கோபப்படவேண்டும் என்னும் நுட்பத் தகவலும் பகிரப்பட்டுள்ளது.
இந்த இராமராஜ்யத்தை வாசித்தால் இராமாயணம் நிறைவெய்துமோ இல்லையோ, நம் வாழ்க்கை நிறைவெய்தும். நிறைவாக உணர வைக்கும்.
வாசியுங்கள், தவற விடாதீர்கள்!