Description
சமையல் கலையில் அசகாய சூரர். பாரம்பரிய வழக்கம், சம்பிரதாயத் தயாரிப்பு என்ற தொன்மை மணம் மாறாமலும், இன்றைய தலைமுறையினரின் நாக்கு ருசிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன உத்திகளைக் கையாண்டும் பாலக்காடு உணவு வகைகளைத் தயாரிக்கும் மந்திரச் சமையல் குறிப்புகளை அமைத்திருக்கிறார்.
சமையல் குறிப்புகள் மட்டுமல்லாமல் பாலக்காடு மற்றும் கேரளத்தின் கலாசாரம், பாரம்பரியம், சரித்திரம். தெய்வ வழிபாடு, பழக்க வழக்கங்கள், நதிக்கரை நாகரிகம், அக்ரஹாரங்கள் போன்றவற்றைப் பற்றிய சுவையான குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கின்றன.